ட்விட்டர் நிறுவனத்தின் முக்கிய சேவை ஒன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, எலான் மஸ்க் சார்ந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதிரடி நிறுத்தம்:
ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை, உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் 3.62 லட்சம் கோடி கொடுத்து சில நாட்களுக்கு முன் வாங்கினார். இவர் இந்த நிறுவனத்தை வாங்கியதும், இதில் ப்ளூ டிக் எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்போரிடம் மாதந்தோறும் 8 டாலர் வசூலிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஏனெனில் அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரமுகர்கள் பலரும் இந்த ப்ளூ டிக் எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருக்கின்றனர். இவர்களை பின் தொடரும் பொதுமக்கள் நம்பகத்தன்மையுடன் அவர்களை தொடர வேண்டும் என்பதற்காக, இந்த முடிவை எடுத்திருப்பதாக மஸ்க் விளக்கம் அளித்தார். தற்போது இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் போலி நபர்கள்,இந்த ப்ளூ டிக் கணக்கு பெற்றுள்ளதால், இதனால் மீண்டும் ஆய்வு செய்து நம்பத் தகுந்தவவர்களுக்கு மட்டும் அதை வழங்க, இந்த கட்டண வசூல் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.