வங்கக்கடலில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் பகல் நேரங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் உறைபனி நிகழக்கூடும். இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.