மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த மிதிலி புயல் தற்போது கரையை கடந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் அரியலூர், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளனர்.