சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து புது உச்சத்திற்கு சென்று உள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.
இன்றைய விலை நிலவரம்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் புது உச்சத்தை எட்டுவது போல, விலைவாசியும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. மறுபுறம் தங்கத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ள மக்கள், இந்த விலைவாசி உயர்வால் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மேலும் ஒரு மாநிலத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு!!
சென்னையில் நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாமல் இருந்தாலும் தங்கத்தின் விலை மட்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்து, ரூ.37,120 க்கும், ஒரு கிராம் 29 ரூபாய் அதிகரித்து ரூ.4,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றம் செய்யப்படாமல் ஒரு கிராம் 53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.