இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு முக்கிய அங்கமாக ஆபரண தங்கம் விளங்கி வருகிறது. சொல்ல போனால் எந்த விசேஷம் என்றாலும் தங்கம் இல்லாமல் இருக்காது என்ற நிலை வந்துவிட்டது. குறிப்பாக அடுத்து வரும் நவம்பர், டிசம்பர் மாதம் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வர இருப்பதால், தங்க நகைகள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற , இறக்கங்களை கண்டு வருகிறது. தற்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து காணப்பட்ட நிலையில், தற்போது இஸ்ரேல் – பாலிஸ்தீன போரின் எதிரொலியால் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.