வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதாவது, கடந்த ஜூலை 24ம் தேதி முதல் இந்த திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மூன்று கட்டங்களாக முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டிருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன்படி, முதற்கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 4 ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முக்கியமான அப்டேட் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, சென்னையில் மட்டும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, விடுபட்டவர்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட முகாம்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் வெடித்த வன்முறை.., 5 பேர் பலியான சோகம்!!!