தமிழகத்தில் அசுர வேகமெடுக்கும் கொரோனா – பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்? அமைச்சர் விளக்கம்!!

0
தமிழகத்தில் அசுர வேகமெடுக்கும் கொரோனா - பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்? அமைச்சர் விளக்கம்!!
மாநிலம் முழுவதும்  5ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை - அரசுக்கு திடீர் கோரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கோடை விடுமுறைக்கு பின் வருகிற திங்கட்கிழமை பள்ளிகள் திட்டமிட்டபடி தொடங்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

புது அச்சம் :

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, கொரோனா பரவல் புது உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தி வந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்  வருகிற 13-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. தற்போது நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, இந்த அறிவிப்பில் ஏதேனும் மாற்றம் வருமா? என குழப்பம் நீடித்து வந்தது. தற்போது, இதனைத் தெளிவு படுத்தும் விதமாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, தற்போதைய கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், 100 முதல் 200 வரை மட்டுமே பாதிப்பு பதிவாகி வருவதால், பள்ளிகளை திறப்பதில் பிரச்சனை இல்லை என தெரிவித்தார். இதைப்போல் பள்ளிகள் திறக்கப் பட்டதும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கோர்பவேக்ஸ் என்னும் 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதையடுத்து, பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்பதை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here