தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மழையைப் பொறுத்து பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் விடுமுறை அளித்து வருகின்றனர். ஆனால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்களே பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால், நேற்று (நவம்பர் 30) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதா இல்லையா செங்கல்பட்டு பள்ளி மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதாவது, நேற்று (நவம்பர் 30) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், சென்னையை ஒட்டிய செங்கல்பட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட வில்லை. இதனால், இந்த குழப்பம் இனி ஏற்படாத வகையில், சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
ரேஷன் அட்டைதாரர்களே.., கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்த சலுகையும் உண்டு.., வெளியான அறிவிப்பு!!!