தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த வாரம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வை முழுமையாக எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. இதற்கிடையில், மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவித்த படியே டிசம்பர் 22 ஆம் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன.
இருப்பினும், தென் மாவட்ட பள்ளிகள் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்ட பள்ளி மாணவர்களுக்கும் டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 2 ஆம் தேதி முதல் நடத்தப்படாத அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை தொடர்ந்தால், மீண்டும் தேர்வு தேதியில் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏதுவாக இருந்தாலும், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 2 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கும். விடுமுறை நீட்டிப்பு குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.