தமிழக ரேஷன் கடைகளில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், புதிய நடைமுறையின் கீழ் பயனர்களுக்கு பொருட்களுக்குரிய ரசீது வழங்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய நடைமுறை:
தமிழக ரேஷன் கடைகள் அனைத்தும் மாநில அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது, அரசு அறிவித்த ரேஷன் பயனர்களுக்கான பொங்கல் தொகுப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய நடைமுறையை அமல்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது மத்திய மற்றும் மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழ் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களை பெறும் பயனர்களுக்கு தனித்தனியாக ரசீது வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்., ஜன.14 வரை தொடர் விடுமுறை! கல்வித்துறை அறிவிப்பு!!
உதாரணமாக 20 கிலோ அரிசியை பயனர் வாங்கினால், அதில் மத்திய அரசு வழங்கும் 15 கிலோவுக்கு தனி ரசிதும் மாநில அரசு வழங்கும் 5 கிலோவுக்கு தனி ரசிதும் வழங்க வேண்டும் எனவும், இதனை கடைபிடிக்காத அலுவலர்கள், அதற்குரிய தொகையை தாங்களே செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கையை அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் கூட்டுறவுத்துறை அனுப்பியுள்ளது.