தமிழகத்தின் இந்தந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
தமிழகத்தின் இந்தந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்:

தமிழகத்தில்  வளிமண்டல சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில், கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி, திருப்பூர், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிக கனமழையும், திருச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது போக நாளைய தினம் குமரி, நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் அதாவது 3ம் தேதி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here