தமிழக அரசானது, கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவி மாதந்தோறும் ரூ. 1000 வழங்கி வருகிறது. கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் இந்த உரிமை தொகை திட்டத்தில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன் பெற்று வந்தனர். இதன் பின் கடந்த மாதத்தில் மேல்முறையீட்டின் மூலம், கூடுதலாக 11 லட்சம் பேர் இத்திட்டத்தின் பயனாளர்களாக மாறி உள்ளனர். கடந்த மாதத்தில் முன்கூட்டியே வழங்கப்பட்ட இந்த உரிமை தொகை, டிசம்பர் மாதத்திலும் விரைவாக வழங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மகளிர்கள், உரிமை தொகையை முன்கூட்டியே வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் சிலருக்கு இம்மாதம் வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும், செப்டம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை கணக்கிடப்பட்டு ரூ. 4000 வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார்.., கண்ணீர் கடலில் மூழ்கிய திரையுலகம்!!