சென்னையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில், செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ள உள்ளனர். தற்போது செங்கல்பட்டு மாவட்டம் ஜி.எஸ்.டி.ரோடு அருகில் 11.84 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 61 பேருந்துகள் நிறுத்துவதற்கான இடவசதி, 44 நடைமேடைகள் மற்றும் டூவீலர், கார் பார்க்கிங் என அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) திட்டமிட்டு உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் விடப்பட்டு விரைவில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட உள்ளனர். செப்டம்பர் இறுதிக்குள் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழக பள்ளிகளில் இந்த பயிற்சி விரைவில் தொடங்கும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!!