புது பொலிவுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்கும் டிக்டாக்?? மத்திய அரசு அதிரடி தகவல்!!

0
புது பொலிவுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்கும் டிக்டாக்?? மத்திய அரசு அதிரடி தகவல்!!
புது பொலிவுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்கும் டிக்டாக்?? மத்திய அரசு அதிரடி தகவல்!!

இந்தியாவில் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலி, புதுப்பொலிவுடன் மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மீண்டும் டிக் டாக் :

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, சீனாவின் யூசி பிரௌசர், டிக் டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்கு மத்திய அரசு 2021 ல் தடை விதித்தது. இதையடுத்து, டிக் டாக் மீண்டும் தனது சேவைகளை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் மீண்டும், இந்தியாவில் தனது கிளைகளை தொடங்க விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதற்கான செயல் முறைகளை மத்திய அரசிடம் விளக்கி உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, விளக்கம் அளித்த மத்திய அரசின் மூத்த அலுவலர் ஒருவர் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், நிறுவனத்தின் கோரிக்கை வந்தவுடன் அங்கீகரிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், இந்த நிறுவனம் இந்தியாவிற்குள் மீண்டும் வந்தால் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.ஆனால் அதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை முறையாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here