தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது வெற்றி சுடரின் பாதுகாப்பிற்காக அபியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் தங்கியுள்ளார். அபிக்கு வெற்றியின் நடவடிக்கை எல்லாம்பார்க்கும்போது பழைய நியாபகம் வர ஆரம்பிக்கிறது. ஆனாலும் கோவம் அவரின் கண்ணை மறைத்து விட்டது.
இப்படி இருக்க கண்மணிக்கு வெற்றி அபியுடன் இருப்பது சுத்தமாகவே பிடிக்கவே இல்லை. இதனால் தீவிரமான திட்டத்தை போடுகிறார். அதாவது அபி வீட்டில் கொலைகாரனுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதாக செய்தியை பரப்பி விடுகிறார். இதனை பார்த்து தருண் கொந்தளிக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
நீ ஒரு கொலைகாரனு ஏன் எங்ககிட்ட மறச்ச என்று கோவப்படுகிறார். மேலும் சுடர் சிம்பா என்னை விட்டு போகாதே என்று அழுகிறார். அபி இனிமேல் என்னையோ சுடரையோ நீ பார்க்க வர கூடாது என்று சொல்கிறார். சுடர் ஒருபக்கம் சிம்பா போகாதே என்று கதறி அழுது கொண்டிருக்கிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது. இதன் பிறகு தான் வெற்றிக்கு சுடர் தன்னுடைய குழந்தை என்ற உண்மை தெரியவருமாம். இனி வரும் எபிசோடுகள் அனைத்தும் இப்படி தான் நகர போகிறதாம்.