கொரோனா பரவல் காரணமாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட விலையில்லா கூடுதல் அரிசி ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒன்னுமே போடாமல் தொங்கவிட்டு காட்டிய ரைசா வில்சன் – உத்து பார்த்து மூடாகிய இளவட்டங்கள்!!
இரு மடங்கு கூடுதல் அரிசி:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியதால் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். மக்களின் இந்த துயரத்தை போக்க, மத்திய அரசு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அரிசியுடன் சேர்த்து, நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசியை விலையில்லாமல் கூடுதலாக வழங்க உத்தரவிட்டது. இதற்காக மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.
முன்னுரிமை மற்றும் அந்தியோதயா திட்டத்தின் கீழ் பயன்பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அளவுடன் இந்த கூடுதல் அரிசியும் சேர்த்து வழங்கப்படும் என்றும், 2 பேர் உள்ள குடும்பத்துக்கு 20 கிலோ, மூன்று பேர் உள்ள குடும்பத்தின் 30 கிலோ என்ற அடிப்படையில் கூடுதல் அரிசி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு அறிவித்த இந்த கூடுதல் அரிசியும் சேர்த்து ஜூன் மாதத்தில் மொத்தமாக வழங்கப்படும். அதே போல் மே மாதம் வழங்க வேண்டிய அரசி ஜூலை மாதம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த தெளிவான அறிவிப்பு பலகைகள் ரேஷன் கடைகளின் முன் வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்