தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி குறித்து, மதுரை விமானநிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியலில் இனி செழியன் கதாபாத்திரத்தில் இனி இவர் தானாம் – யாருனு நீங்களே பாருங்க!!
புதிய அறிவிப்பு:
தமிழகத்தில், கூட்டுறவுத் துறையின் கீழ் 5 சவரன் நகை கடன் பெற்றவர்களுக்கு, அண்மையில் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததால், பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு தள்ளுபடி பெற்றவர்களின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மாதம் பிப்ரவரி 10ம் தேதி முதல், இந்த கூட்டுறவு நகைக்கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. நகைகளை அடகு வைத்ததற்கான ஆவணங்களை வைத்து நகையை திருப்பி கேட்டால், அதிகாரிகள் முறையான பதில் தெரிவிப்பது இல்லை போன்ற எண்ணற்ற குற்றச்சாட்டையும் வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பல கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி பட்டியல் ஒட்டப்படாமலும், பயனாளிகளிடம் நகைகள் திரும்ப வழங்கப்படாமலும் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, இந்த கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி பற்றி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, கூட்டுறவு நகை கடன் தள்ளுபடியை எல்லா இடங்களிலும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டு தான் உள்ளோம் என தெரிவித்தார். தற்போது அமைச்சரின் இந்த நகை கடன் பற்றிய கருத்து மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்