சொந்த மண்ணில் கோட்டை விட்ட அணி…, 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வீழ்ந்த சோகம்!!

0
சொந்த மண்ணில் கோட்டை விட்ட அணி..., 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வீழ்ந்த சோகம்!!
சொந்த மண்ணில் கோட்டை விட்ட அணி..., 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வீழ்ந்த சோகம்!!

மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியிடம் தென் ஆப்பிரிக்க அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

டி20 உலக கோப்பை:

தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடர் நேற்று முதல் தொடங்கி உள்ளது. 10 அணிகள் தலா 5 அணிகளாக, இரு குரூப்களின் கீழ், முதலில் லீக் சுற்றுகள் போல் போட்டியிட உள்ளன. இந்த வகையில், குரூப் A யில் இடம்பெற்றுள்ள, தென் ஆப்பிரிக்க அணி நேற்று தனது முதல் கட்டமாக இலங்கை அணியை எதிர்த்து போட்டியிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்க வீராங்கனையான ஹர்ஷித் 8 ரன்களில் வெளியேற, கேப்டன் சாமரி அதபத்து மற்றும் விஷ்மி குணரத்ன அதிரடி காட்ட தொடங்கினர். இவர்கள், 2 வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து அசத்தினார். இவர்களில் சாமரி அதபத்து (68), விஷ்மி குணரத்ன (35) ரன்களில் பெவிலியன் திரும்ப, இலங்கை அணி 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்திருந்தது.

சூர்யகுமார் சொதப்பல் ஆட்டத்துக்கு ரோஹித் தான் காரணமா? ரசிகர்கள் வேதனை!!!

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, லாரா வோல்வார்ட் (18), டாஸ்மின் பிரிட்ஸ் (12), மரிசான் கேப் (11), சுனே லூஸ் (28) என சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். இதனால், 20 ஓவர் முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. தனது சொந்த மண்ணில் நடைபெற்ற, உலக கோப்பையின் முதல் போட்டியில் தோல்வியை தழுவி தென் ஆப்பிரிக்க அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here