தென்னிந்திய திரையில் தனக்கென தனி புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது அவர் கங்குவா படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் “சூர்யா 43 ”படத்தில் நடிக்க இருக்கிறார்.
IPL 2024: தோனியுடனான சிறந்த தருணத்தை நினைவு கூர்ந்த ஜடேஜா.. அவரே சொன்ன கருத்து வைரல்!!
மேலும் இப்படத்தை 2D என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக இப்படம் ட்ராப் ஆகிவிட்டதாக தகவல்கள் உலா வந்தன. தற்போது அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் 2D நிறுவனம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த கூட்டணி இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. எங்களது சிறந்த படத்தை கொடுப்பதற்காக பணியாற்றி வருகிறோம். விரைவில் படப்பிடிப்பை தொடங்குவோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.