![உயிருக்கு போராடும் அனு மற்றும் அவரின் குழந்தை.., மீண்டு வருவார்களா?? பரபரப்பான ட்விஸ்டுடன் சுந்தரி சீரியல்!! உயிருக்கு போராடும் அனு மற்றும் அவரின் குழந்தை.., மீண்டு வருவார்களா?? பரபரப்பான ட்விஸ்டுடன் சுந்தரி சீரியல்!!](https://enewz.in/wp-content/uploads/2022/10/feature-im-3-7-696x392.jpg)
தினந்தோறும் பரபரப்பான ட்விஸ்டுகளுடன் அரங்கேறும் சுந்தரி சீரியலில் இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என பார்க்கலாம்.
சுந்தரி சீரியல்
சன் டிவியின் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் சுந்தரி. இந்த சீரியலில் தனது கணவன் கார்த்திக் அனுவை திருமணம் செய்து கொண்டார் என்ற விஷயம் தெரிந்தும் அவரை மாட்டி விடாமல் புத்திசாலித்தனமாக தனது மாமா முருகன் உட்பட எல்லாரையும் சமாளித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுமட்டுமல்லாமல் அனு கர்ப்பமாக இருப்பதால் சுந்தரி எல்லா விஷயத்தை மறைத்து கார்த்திக்கை காப்பாற்றி வருகிறார். ஆனா சுந்தரி தான் கார்த்திக்கோட முதல் மனைவி என்ற விஷயம் அனுவின் அம்மாவுக்கு தெரிந்தும் அவரும் வாய் திறக்காமல் இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் கார்த்திக் ஏன் சுந்தரி கூட க்ளோஸா இருக்கான், அவளுக்காக எல்லா வேலையும் பாக்குறான் என அனுவுக்கு சந்தேகம் வருகிறது.
கண்ணான கண்ணே சீரியல் யுவாவின் சொந்த தங்கச்சியை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் பேமிலி போட்டோ!!
இத பத்தி யார்டையும் சொல்ல முடியாம யோசிச்சு யோசிச்சு ரொம்ப டென்ஷனாக இருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் அனு சீரியஸான கண்டிஷனில் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். அனுவை செக் பண்ண மருத்துவர்கள் குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கும் என கூறிவிட்டனர்.
இதனால் ஒரு பக்கம் அனுவின் அம்மா குழந்தை மேல் இவ்வளவு ஆசையாக இருத்தலே அவளுக்கு எதுவும் ஆக கூடாது என வருத்தத்தில் உள்ளார். மறுபக்கம் கார்த்திக், சுந்தரி இருவரும் அனுவுக்கு ஒன்னும் ஆக கூடாது என கடவுளை வேண்டி வருகின்றனர். இதனால் அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என வெயிட் பண்ணி பார்க்கலாம்.
அனுவும், குழந்தையும் நல்லபடியாக உயிர் பிழைத்து வருவார்களா?? அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால் அனு கதாபாத்திரம் தான் சீரியலுக்கு முக்கியத்துவம், எனவே கண்டிப்பாக அவர் இறந்து போக வாய்ப்பே கிடையாது. மேலும் குழந்தைக்கு ஏதும் ஆபத்து இருக்குமா?? என்று கேட்டால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.