வடக்கில் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் பீகாரில் 83 பேர் பரிதமாக உயிர் இழந்து உள்ளனர். உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 வழங்க முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டு உள்ளார்.
பருவமழை:
வடக்கில் உள்ள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கடந்த 3 தினங்களாக தீவிரமடைந்து வந்தது. இடியுடன் கூடிய மழையும் பெய்து வந்தது. அதுவும் உத்தர பிரதேஷ் மாநிலம் மற்றும் பீகாரில் மிக அதிகமாக காணப்பட்டது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
உயிர் இழப்பு:
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இப்படியான நிலையில் இடி மற்றும் மின்னல் தாக்கி 83 பேர் பீகாரில் பரிதாபமாக உயிர் இழந்து உள்ளனர். அங்கு அதிகபட்சமாக கோபால்கஞ்சில் 13 பேரும், மதுபானி மற்றும் நவாடாவில் தலா 8 பேரும், சிவானில் 6 பேரும்,தர்பங்கா, கிழக்கு சாம்பரானில் மற்றும் பங்காவில் தலா 5 பேரும் ககாரிய மற்றும் அவுரங்கபாடில் தலா 3 பெரும் உயிர் இழந்து உள்ளனர்.
முதல்வர் உத்தரவு:
இப்படியான நிலையில் பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் யாதவின் ஜனதா தால் ஆட்சி நடக்கிறது. உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் தனது இரங்கலை தெரிவித்து உள்ளார். மேலும், இடி மின்னல் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் அரசு சார்பில் வழங்க படும் என்று கூறியுள்ளார்.