தமிழகத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, 200 நாட்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்த மனு நிராகரிக்கப்பட்டதோடு, தொடர்ந்து 19 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளே., ஆதார் கார்டு இருந்த போதும்., இதை உடனே பண்ணிடலாம்.., வெளியான அறிவிப்பு!!
இந்த சூழலில், சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்த செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநில அரசுக்கு, சிறையில் இருந்தபடி கடிதம் எழுதி உள்ளார். இதைத்தொடர்ந்து நாளையுடன் (பிப்.14) நீதிமன்ற காவல் முடிவடைய உள்ளது. தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், இம்முறை ஜாமீன் கிடைக்குமா? என பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.