தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயத்தில் ஒன்றான சதுரகிரி சுந்தர – சந்தன மகாலிங்கம் மலை கோவிலில், மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையில் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் வரும் 23ஆம் தேதி பிரதோஷம் மற்றும் 25ஆம் தேதி தை பௌர்ணமி வர உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதன் காரணமாக ஜனவரி 23 முதல் 26ஆம் தேதி வரை மலை பாதையில் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். அதேபோல் மலை பாதையில் செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.
மது பிரியர்களை அடிக்கும் காட்சியை நீக்க வேண்டும்., நடிகர் விஷாலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!