இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை போல, தென் ஆப்பிரிக்காவில் SA20 லீக் தொடர் கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இத்தொடரின் இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து, டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது.
இந்த போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். இதையடுத்து, முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 204 ரன்களை எடுத்திருந்தது.
“இந்தியாவில் இந்த திட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகம் தான்”., பிரதமர் மோடி உரை!!!
இதில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 44 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 56* ரன்களை குவித்திருந்தார். இந்த கடினமான இலக்கை துரத்திய டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, 115 ரன்களுக்குள்ளே சுருண்டது. இதன் மூலம், 89 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அபாரமாக வெற்றி பெற்றுக் கோப்பையை தன்வசப்படுத்தியது. தற்போது இந்த அணிக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.