2022 வரை சமூக இடைவெளி அவசியம் – ஹார்வர்டு பல்கலை ஆய்வில் தகவல்..!

0

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2022ம் ஆண்டு வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என ஹார்வர்டு பல்கலை தெரிவித்துள்ளது.

சமூக இடைவெளிதான் ஒரே தீர்வு..!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முறையான சிகிச்சையோ மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் சமூக இடைவெளி ஒன்றே இந்த வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு என ஹார்வர்டு பல்கலையின் பொதுச் சுகாதாரப் பள்ளி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பரவ வாய்ப்பு..!

கடந்த 2003ல் சார்ஸ் வைரஸ் இடைவெளிக்குப் பின் மிகவும் பெரிதாக வெடித்தது. அதேபோல் கொரோனா வைரசும் வெடிப்பதற்கு முன் அதை அழிக்கத் தேவையான மருந்துகளைக் கண்டுபிடிப்பது அவசியம்.

சீனா கொரோனா வைரசிலிருந்து மீண்டு ஊரடங்கைத் தளர்த்தியது ஆனால் மீண்டும் அங்கு கொரோனாவின் இரண்டாவது அலை வீசத்துவங்கியதே இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதனால் 2022ம் ஆண்டு வரை சமூக விலகலை கடைபிடித்தால் மட்டுமே இந்த வைரசிலிருந்து மனித குலத்தைக் காக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here