நாடு முழுவதும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். கொரோனா கால கட்டத்திற்கு பிறகு முழுவதுமாக நடைபெற்று வரும் இந்த கல்வி ஆண்டில், பல்வேறு பள்ளிகளில் வருகை பதிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பயோமெட்ரிக் முறை, ஆன்லைன் வருகைப்பதிவு என மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்களுக்கான ஆன்லைன் வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆன்லைன் வருகைக்கு தேவையான அனைத்து தேவைகளையும் வரும் டிசம்பர் 12 க்குள் முடித்து, டிசம்பர் 15-ஆம் தேதி முதல் இதனை நடைமுறைப் படுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், வராத மாணவர்கள் பற்றிய தினசரி தகவல்களை ஒவ்வொரு நாளும் அவர்களின் பெற்றோருக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு sms மூலம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
மதுரையில் இந்த ஜூவல்லரி கடையில் தீ விபத்து., உரிமையாளர் மருமகன் உயிரிழப்பு!!!