மாநில முழுவதும் வருகிற பொங்கல் பண்டிகையின் போது, ரூபாய் 500 ஐ ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு முடிவு:
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில், வரும் தை முதல் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழர்களின் பண்டிகையான இந்த நாளில், அரசின் சார்பாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் பொங்கல் சாமான்கள், என இதோடு சேர்த்து ரொக்க பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கடந்தாண்டு, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது கொரோனா, காலகட்டம் என்பதால், இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பணப்பரிசு இல்லாமல் மளிகை தொகுப்பு பொருள் வழங்கப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.
இனி கல்வி இடைநிற்றலே இருக்காது.,, 8 நகரங்களில் புதிய ஸ்கூல்ஸ்.,, முக்கிய வாக்குறுதி!!
தற்போது இந்த திட்டத்தில் அதிரடி மாற்றம் ஒன்றை புதுவை அரசு அறிவித்துள்ளது. அதாவது, ரேஷன் கார்டில் உள்ள 18 வயது நிரம்பியவருக்கு, வேட்டி சேலைக்கு பதிலாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 500 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை, மாநில ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.