நாடு முழுவதும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வரும் நிலையில் பல திட்டங்களை தொடர்ந்து பள்ளிகளுக்கு அமல்படுத்தி வருகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சீனாவில் முக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது தனியார் பள்ளிகளில் வழக்கமாக சில முக்கிய விஷயங்களுக்கு கட்டணம் வசூலிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இப்பொழுது வித்தியாசமான முறையாக மதிய இடைவெளியில் தலையணை வைத்து தூங்கும் மாணவர்களுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் அங்கு பிரபலமாக பயன்படுத்தும் Wechat- இல் கட்டணம் தொடர்பான விஷயங்கள் விவாதிக்க படுவதாகவும் இதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது குறித்து பேசிய தனியார் பள்ளி நிர்வாகம் கூறியதாவது, இந்த மாதிரி கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அதிகாரம் உண்டு. மேலும் விதிமுறைகளின் அடிப்படையில் தான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளனர்.
மேலும் டேபிள் மீது தூங்கும் மாணவர்களுக்கு 200 யுவான் (ரூ.2275), மேட்டை விரித்து தூங்கும் மாணவர்களுக்கு 360 யுவான் (ரூ.4,094) பள்ளி வளாகத்தில் உள்ள ஓய்வறைகளில் மெத்தையில் தூங்கும் மாணவர்களுக்கு 680 யுவான் (ரூ.7,856) கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.