பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது, ஜீவா வீட்டை விட்டு தனியாக பிரிந்து வந்த நிலையில் ஜனார்த்தனன் அவர் பெயரில் மொத்த சொத்தையும் எழுதி வைத்து விட்டார். ஜீவா உணர்ச்சிவசப்பட்டாலும் பின்னால் நடக்க போவதை கொஞ்சம் கூட உணரவில்லை.
இப்படி இருக்க இப்பொழுது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது கடையை பற்றி ஜனார்த்தனன் விசாரித்து கொண்டிருக்கிறார். அரிசியில் கலப்படம் இருப்பதாக ஜீவா சொல்ல அதற்கு ஜனார்த்தனன் எதுனாலும் என்கிட்ட கேட்டுட்டு பண்ணுங்க என்று சொல்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் ஜீவா நொந்து போகிறார். பொறுப்பை உங்க அப்பா என்கிட்ட கொடுத்தாலும், என்ன முழுசா நம்பவே இல்லை என்று சொல்கிறார். அதன் பிறகும் ஜீவா கடையை பற்றி ஆலோசனை சொல்ல என் கிட்ட கேக்காம எதுவும் நடக்க கூடாது என்று சொல்கிறார் ஜனார்த்தனன். அடுத்தடுத்து அசிங்கப்பட்டுக்கொண்டே இருக்கும் ஜீவா ரொம்பவே நொந்து போயுள்ளார். எப்படியும் ஜீவா இங்கிருந்தும் கிளம்பி விடுவார் என்று ப்ரோமோவை பார்க்கும்போதே தெரிகிறது.