பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மூர்த்தி குடும்பம் ஜனார்தனனுக்கு வீட்டை விற்று விட்டு இப்பொழுது முழித்து கொண்டுள்ளனர். அதாவது வீடு இப்பொழுது மீனாவின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மொத்த குடும்பமும் ஷாக்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஐஸ்வர்யா இதுதான் சாக்கு என்று மீனாவை தனத்துடன் போட்டு கொடுக்கிறார். மேலும் ஜீவாவுக்கும் மீனாவிற்கும் இடையே சண்டைகள் பெரிதாக வெடிக்கிறது. அப்பா இப்படி செஞ்சது எனக்கு தெரியாது என்று மீனா எவ்வளவு சொல்லியும் ஜீவா நம்ப மறுக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் மீனாவிற்கு வீட்டில் உள்ளவர்களை பார்க்க குற்ற உணர்ச்சியாகவே உள்ளது. மேலும் இதன் பிறகு தான் வீட்டில் பெரிய பிரச்சனையே காத்து கொண்டுள்ளது. அதாவது, மீனா மறுபடியும் கோவித்துக்கொண்டு ஜனார்த்தனன் வீட்டிற்கு சென்று விடுவாராம்.
ஜீவாவையும் எப்படியாவது வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கி கொள்ளலாம் என்று இருக்கும் ஜனார்த்தனன் இதனை சாதகமாக பயன்படுத்த திட்டம் போடுகிறார். இதன் பிறகு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடே ஆட்டம் காண உள்ளது. இனி வரும் எபிசோடுகள் கண்டிப்பாக சூடுபிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.