பாண்டியன் ஸ்டோர்ஸில் இப்பொழுது முல்லையின் வளைகாப்பு விழா பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த விசேஷத்தை வைத்தே குடும்பம் ஒன்று சேர்ந்து விடும் என்று கற்பனை கோட்டை கட்டி வருகிறார் தனம். ஆனால் ஜீவாவிற்கு அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லவே இல்லை.
கண்ணனும் அதே தான். தனியாக வாழ்வது சந்தோசமாக இருப்பது பொன்று அவருக்கும் தோன்றுகிறது. ஐஸ்வர்யா தான் ஓவராக செய்து வருகிறார். பணத்தை தண்ணி போல செலவழித்து வருகிறார். இதனை கண்ணன் கண்டுகொள்ளவும் இல்லை என்பதால், இஷ்டத்துக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி வருகிறார்.
ஜோதிகாவுடைய அப்பா.., அதாங்க சூர்யாவின் சொந்த மாமனாரை பார்த்திருக்கீங்களா?? வைரல் கிளிக்ஸ்!!
எப்படியும் கண்ணன் ஓட்டாண்டி ஆக போவது உறுதியான ஒன்று தான். இந்நிலையில் முல்லை வளைகாப்பில் சீன் காட்டுவதற்காக தங்கத்தில் பொருட்களை வாங்கி கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, கண்ணனுக்கு இந்த மாத சம்பளத்தில் எதோ பிரச்சனை ஏற்பட இதனால் தாமதமாகும். அதுமட்டுமின்றி கடன் வேறு தலைக்கு மேல் இருப்பதால், கடனுக்கு மேல் கடன் எகிறி விடுமாம். இதனால் ஐஸ்வர்யா நாளடைவில் கடையில் உனக்கும் பங்கு இருக்கு போயி கேளு என்று ஏத்தி விடுவாராம்.