![பிடிக்கலைன்னா வீட்டை விட்டு வெளியே போ.., தனம்-மீனா இடையே முத்திய சண்டை.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!! பிடிக்கலைன்னா வீட்டை விட்டு வெளியே போ.., தனம்-மீனா இடையே முத்திய சண்டை.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!](https://enewz.in/wp-content/uploads/2022/11/maxresdefault-4-1-696x392.jpg)
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி குடும்பத்தையே அசிங்கப்படுத்தி வெளியே அனுப்புகிறார் ஜனார்த்தனன். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரையுமே ஏளனமாக பேசுகிறார். இதனை பொறுக்க முடியாமல் தனம் மயங்கி விழுக எல்லாமே நடிப்பு என்றும் சொல்கிறார் ஜனார்த்தனன்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
![](https://enewz.in/wp-content/uploads/2022/11/jsdhfkj.jpg)
இதனால் கோவமடையும் மூர்த்தி வீட்டை விட்டு இப்போவே கிளம்புறோம் என்று சொல்கிறார். கதிர் குடும்பம் மொத்தத்தையும் தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். இப்படி அசிங்கப்பட்டா வீட்டை விட்டு வெளியேறனும் என்று தனம், மூர்த்தி கதறுகின்றனர்.
இப்பொழுது தான் ஒற்றுமையாக குடும்பமே வாழ ஆரம்பித்தது. அதற்குள் இப்படி ஒரு நிலைமையா? என இல்லத்தரசிகள் கதறி வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மீனாவும் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
ஆனால் அப்பா மேல் இருக்கும் பாசம் இன்னும் கொஞ்சம் இருக்க தான் செய்தது. இதனால் மீனா மற்றும் தனம் இடையே சண்டைகள் வந்து கொண்டே இருக்குமாம். கோவத்தில் மீனாவை வீட்டை விட்டே வெளியே போக சொல்லுவாராம். இதனால் வீட்டில் பூகம்பமே வெடிக்க காத்துள்ளது.