தமிழகத்தில் சென்னையில் நிலை கொண்டிருந்த மிக்ஜம் புயல் இப்போது மெது மெதுவாக நகர்ந்து ஆந்திராவை நோக்கி செல்கிறது. மேலும் இந்த புயல் ஆந்திராவில் நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் ஆந்திரா பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக அதனை சுற்றியுள்ள பிற மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இப்போது ஒடிசா அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது புயல் காரணமாக நாளை அனைத்து தொடக்க, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கலெக்டர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
கோபியை கதறவிடும் பாக்கியா.., ஈஸ்வரிக்கு ராமமூர்த்தி கொடுத்த பதிலடி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!