மது பிரியர்கள் கவனத்திற்கு – இனி குடித்தால் ஜாமீன் கிடையாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

0

நாட்டில் அதிகரித்து வரும் மது சார்ந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இனி மது குடித்தால்  ஜாமீன் வழங்க மாட்டோம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவு:

திருச்சியில் கடந்த ஜூலை 25ஆம் சிவா, கார்த்திக், சுரேஷ் மற்றும் பாண்டியன் ஆகிய நால்வரும்  சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது நால்வருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.  ஆரம்பத்தில் வெறும் வாய்தகராறாக மட்டுமே இருந்தது, சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில்,  சிவா மற்றும் கார்த்திக் இருவரும் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து சுரேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கடந்த 37 நாட்களாக அந்த இரண்டு பேரும் சிறையில் உள்ளனர். இதனை அடுத்து, தங்கள் மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என்றும், எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நாங்கள் சுரேஷை தாக்க வில்லை என்றும் இருவர் தரப்பில் வாதிட்டனர்.

 

இதனால் தங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.  கடந்த சில நாட்களாக சிறையில் உள்ள எங்களின் ஜாமீன் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாகவும் தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதாவது இளைஞர்களின் இந்த செயல் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

இனி இது போன்ற வழக்குகளில் ஜாமீன் வழங்க முடியாது என்றும், அப்படி ஜாமீன் தேவைப்பட்டால் இனி மேல் மது அருந்த மாட்டேன் என்ற பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இது சார்ந்த வழக்கை நீதிபதி புகழேந்தி ஒத்திவைத்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here