![குஜராத் & மகாராஷ்டிராவை தாக்க உள்ள ‘நிசார்கா புயல்’ – அமித்ஷா அவசர ஆலோசனை..! குஜராத் & மகாராஷ்டிராவை தாக்க உள்ள ‘நிசார்கா புயல்’ – அமித்ஷா அவசர ஆலோசனை..!](https://enewz.in/wp-content/uploads/2020/06/amith-sha.jpg)
நாளை மறுநாள் (ஜூன் 3) குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை அரபிக்கடலில் உருவான ‘நிசார்கா புயல்’ தாக்க உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
நிசார்கா புயல்:
தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று முதல் (ஜூன் 1) தென்மேற்குப் பருவமழை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக்கடலில் உருவாகி காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ‘நிசார்கா புயல்’ ஆக மாறியுள்ளது. இந்த புயல் வரும் ஜூன் 3ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை நடைபெற்று உள்ளது.
![](https://enewz.in/wp-content/uploads/2020/06/nisarka-puyal-1.jpg)
இதில் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அமித்ஷா அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது புயல் தாக்கத்தின் பொழுது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தற்போது மஹாராஷ்டிராவில் மட்டும் 9 தேசிய பேரிடர் மீட்புப்படை குவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் மும்பையில் 3 குழுக்களும், பல்காரில் இரண்டு குழுக்களும், தானே, ரெய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் பகுதியில் தலா ஒரு பேரிடர் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |