இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மலையேறி “டிரக்கிங்” செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். இருந்தாலும் கோடை உள்ளிட்ட காலங்களில், மலையேற்ற பாதைகளில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பல்வேறு இடங்களிலும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேனி குரங்கணி மலையில் 20 பேர் காட்டுத்தீயில் சிக்கி கொண்டு உயிரிழந்தனர்.
இவ மலேசியாவே கிடையாது.., முத்துவால் ரோகினிக்கு வந்த சிக்கல்.., சிட்டி சொன்ன உண்மை!!!
அதன்படி தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால், தமிழகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில், வனத்துறையிடம் அனுமதி பெற்று, ‘டிரெக்கிங்’ செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஏலகிரி, அமர்தி, மேல் அரசம்பட்டு தீர்த்தகிரி, அம்மூர் மற்றும் ஒடுகத்தூர் ஆகிய ஆறு மலைப்பாதைகளில் “டிரெக்கிங்” செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.