இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் வாழும் மைத்தேயி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு குக்கி இனத்தின எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 2 போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த சண்டை பெரிதான நிலையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் போராட்டங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் உள்ள போலீசாருடைய ஆயுத கிடங்கை 2000 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து முற்றுகையிட்டுள்ளனர். இதனால் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் கூட்டத்தை கலைத்துள்ளனர். மேலும் தற்போது இம்பால் மாவட்டத்திற்கு ஊரடங்கு விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.., உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு!!!