தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிகுந்த வேதனையுடன் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அதாவது ப்ரெண்ட்ஸ்(Friends) வெப் தொடரில் சாண்ட்லர் பிங்காக நடித்த மேத்யூ பெர்ரி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இல்லத்தில் பிணமாக கிடந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் அவரின் இறப்பு குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, அவர் இப்பொழுது உயிரோடு இல்லை என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. என்னில் பாதியாக இருந்தவர். அவர் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் சாண்ட்லர் என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆதரவு கூறி வருகின்றனர்.