மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை மாதம் மத்திய அரசு அகவிலைப்படி உயர்த்தியதை தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கினர். இந்நிலையில் தமிழக அரசு தற்போது முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளனர். அதாவது திருக்கோவில்களில் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் பெறக்கூடிய நிரந்தரப் பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
அதன் பிறகு ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வந்தது. எனவே பணியாளர்கள் கூடிய விரைவில் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது தமிழக அரசு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப்படியை 42 %ல் இருந்து 46 % வழங்க உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு பகுதி நேர, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!