இன்றைய காலகட்டத்தில் பண்டிகை, வார விடுமுறை உள்ளிட்ட காலங்களில் பலரும் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களில் பொழுதை கழிக்கவே விரும்புகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலியில் உள்ள மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் வந்தபடி இருப்பதால், உள்ளூர் முதல் வெளியூரில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தருவார்கள்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில் மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே இன்று (ஆகஸ்ட் 29) முதல் 4 நாட்களுக்கு பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்துள்ளனர். ஓணம் பண்டிகை விடுமுறை நாட்களை சிறப்பிக்க வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.