தமிழகத்தின் முன்னணி சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளரான, அருள் சரவணன் தி லெஜண்ட் திரைப்படத்தை அடுத்து, தான் எடுத்துள்ள முக்கிய முடிவை அதிரடியாக அறிவித்துள்ளார்.
அண்ணாச்சி பதிவு :
தமிழகத்தில் உள்ள முன்னணி கடைகளில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். இந்த கடையின் உரிமையாளர் அருள் சரவணன், தனது நீண்ட நாள் கனமான சினிமா ஹீரோவை, தனது “தி லெஜன்ட்” படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார். ஜேடி & ஜெர்ரி இயக்கத்தில் உருவான தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில், ஊர்வசி ரவுத்தேலா என்ற பாலிவுட் ஹீரோயினுடன் ஜோடி போட்டு நடித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்தப் படம், ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தின் முடிவு எப்படி இருந்தாலும் தன் நடிப்பதை மட்டும் நிறுத்தப் போவதில்லை என்பதில் அண்ணாச்சி உறுதியாக இருந்தார். தற்போது இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, தி லெஜன்ட் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை, எந்த ஒரு நிறுவனத்திற்கும் தரப் போவதில்லை எனவும், இதுபோக லெஜண்ட் திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிடவும் விருப்பம் இல்லை என்றும் அறிவித்துள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர் இவர் என்பதால், இந்த முடிவுகளில் தனக்கு விருப்பமில்லை என உறுதியாக அறிவித்துள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், ஏன் படத்தை வாங்க யாரும் தயாராக இல்லையா? என கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் இதை நாங்க உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கல என கமெண்ட் செய்துள்ளனர்.