7வது ஊதிய குழுவின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசு ஊழியர்களுக்கும் நடப்பு ஆண்டின் முதலாவது அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயரும் என AICPI குறியீடு மூலம் தெரிவித்து வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு எப்போது தெரிவிக்கும் என ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்றும் (செப்டம்பர் 9), நாளையும் “G 20 உச்சி மாநாடு” டெல்லியில் நடைபெற உள்ளது. இம்மாநாடு முடிவடைந்த பிறகு அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.