மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படி உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. தற்போது இதைத் தொடர்ந்து மற்றொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
அதாவது அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து 18 மாதங்களுக்கான டி ஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்ந்தால் HRA ம் உயரும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்கள் பயனடையும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.