அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழக பகுதியான ராமநாதபுரம், கடலூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கனமழை
தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இலங்கையை ஒட்டியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடற்கரை பகுதிகளான ராமநாதபுரம் மற்றும் கடலூர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் நாளை ஜனவரி 13 ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, தூத்துக்குடி, கன்னியகுமரி மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 14 ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். தொடர்ந்து 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அங்கங்கே லேசான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், மேலும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் நகரின் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 வரை அவசர நிலை பிரகடனம் நீடிப்பு – மலேசிய அரசு அறிவிப்பு!!
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாவூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் அதிகமான இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும் ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சதீவுகள் மற்றும் மாலத்தீவுகள் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.