இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி இன்று (பிப்ரவரி 23) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்த அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.
அதன் பிறகு களம் இறங்கிய ஜோ ரூட் பொறுப்பாக விளையாடினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இவர் 9 பவுண்டரி உட்பட 108 ரன்கள் விளாசினார். இவருக்கு பக்கபலமாக நின்ற பென் ஃபோக்ஸ் 47 ரன்களை எடுத்தார். இந்த நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்துள்ளது.
இதையடுத்து நாளை (பிப்ரவரி 24) 2 ஆம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில், இந்திய வீரர் அஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தியத்தன் மூலம், இங்கிலாந்துக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.