இந்தியாவில், வருகிற ஜூலை 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.
தடை விதிப்பு:
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பட்டால், சுற்றுப்புற சூழலின் தூய்மை கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், அதை உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்யவும், இருப்பு வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெகிழியால் செய்யப்படும் காது குடையும் குச்சிகள், பலூன் குச்சி, தெர்மாகோல், பிளாஸ்டிக் கத்தி மற்றும் ஸ்ட்ரா, பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப்புகள், சிகரெட் அட்டைகள், ஐஸ்கிரீம் குச்சிகள் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள, பிளாஸ்டிக் பேனர்கள் மற்றும் பிவிசி பேனர்கள் ஆகியவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்