IND vs ENG Test: டெஸ்ட் தொடரில் இருந்து விலக இருக்கும் இந்திய வீரர்?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
IND vs ENG Test: டெஸ்ட் தொடரில் இருந்து விலக இருக்கும் இந்திய வீரர்?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து 3 வது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு இரு அணிகளும் தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் இனி வரும் 3 போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, முதுகு வலி மற்றும் இடுப்பு வலி காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், முதல் 2 போட்டிகளில் ஓய்வு பெற்ற விராட் கோலி மீண்டும் இந்திய அணியில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here