ஐசிசி சார்பாக மாதந்தோறும் வழங்கப்படும் “player of the month” விருதை, மார்ச் மாதத்திற்கு பங்களாதேஷ் வீரரும், ருவாண்டன் வீராங்கனையும் வென்றுள்ளனர்.
ஐசிசி விருது:
ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட் தொடரின் 3 வடிவிலும் சிறந்து விளங்கிய வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து, “player of the month” என்ற பெயரில், ஐசிசியானது விருது வழங்கி வருகிறது. இந்த வகையில், மார்ச் மாதத்தில், டி20 மற்றும் ஒருநாள் தொடர் என 11 போட்டிகளில் 4 அரைசதம் உட்பட 353 ரன்களை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிராக பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் எடுத்து அசத்தி இருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன் மூலம், மார்ச் மாதத்திற்கான “player of the month” என்ற விருதை பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் தட்டிச் சென்றுள்ளார். மேலும், ஆல்ரவுண்டரான இவர், ஐசிசியின் ஆல்ரவுண்டருக்கான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான தரவரிசையில், முதலிடத்தையும் அடைந்துள்ளார்.
இதே போல, மார்ச் மாதத்திருக்கான சிறந்த மகளிர் விருதை ருவாண்டன்வின் ஹென்றிட் இஷிம்வே வென்றுள்ளார். இவர், கடந்த மாதத்தில், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தனது அபாரமான திறமை வெளிப்படுத்தியதன் மூலம், இந்த விருதுக்கு தகுதி பெற்றுள்ளார்.