கர்நாடக மாநிலத்தில், மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள மாநில அரசின் நடவடிக்கை தொடரும் என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
வீடு திரும்பிய சமந்தாவிற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி – அவரே வெளியிட்ட அழகிய பதிவு!!
அதிரடி தீர்ப்பு :
கர்நாடக மாநிலத்தின் , உடுப்பி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஏற்பட்ட ஹிஜாப் விவகாரம் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் தங்கள் ஆடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த வழக்கை அடுத்து, மாணவர்கள் பள்ளிக்கு சீருடையில் மட்டுமே வர வேண்டும் என மாநில அரசு கடந்த பிப்ரவரி 5ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றம், மாநில அரசின் இந்த ஹிஜாப் மீதான தடை தொடரும் என அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்