![குணசேகரனின் உண்மை முகத்தை கண்டறியும் குந்தவை.., சக்தியின் முடிவு என்ன?? எதிர்நீச்சல் சீரியல் ட்விஸ்ட்!!](https://enewz.in/wp-content/uploads/2022/10/feature-im-1-12.jpg)
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பான கதை களத்தோடு சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடர் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலிலே மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி டாப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது இந்த சீரியலில் ஜனனி திருமணமாகி சென்றிருக்கும் குணசேகரன் வீட்டில் உள்ள ஆண்கள் பெண்களை அடிமைகளாக நடத்தி வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதை அந்த வீட்டிற்கு சென்ற ஜனனி கொஞ்ச நாட்களிலேயே எல்லா விஷயத்தையும் தெரிந்து கொண்டு சண்டை போடுகிறார். வீட்டில் ஈஸ்வரி, நந்தினியை மோட்டிவேட் செய்து பெண் அடிமையை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். கடைசி வரை ஜனனியால் அது முடியவே இல்லை. சக்தி மனதை குணசேகரன் மொத்தமாகவே மாற்றி விட்டு ஜனனிக்கு எதிராக திருப்பி விட்டார். ஒற்றுமையாக இருந்து வந்த ஜனனி-சக்திக்கு இடையே பெரிய பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்தது. கடைசியில் சக்தி ஜனனியை கேவலமாக பேசி வீட்டை விட்டே அனுப்பி விட்டார்.
இந்நிலையில் ஜனனி எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் அவரது வீட்டில் உள்ள அனைவரும் பதட்டத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஜனனி வீட்டை விட்டு சென்றதும் குணசேகரன் வீட்டிற்கு குந்தவை என்ட்ரி கொடுக்கிறார். இந்த பெண்ணை குணசேகரன் விழுந்து விழுந்து கவனிக்கிறார். ஆனால் இந்த பெண்ணிற்கு எப்போது குணசேகரனின் உண்மையான முகம் தெரிய வரும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் சக்தியை திருமணம் செய்து வைக்கும் வரைக்கும் தான் குந்தவைக்கு இவ்வளவு மரியாதை இருக்கும்.
வெண்பா கழுத்தில் தாலி கட்ட தயாரான பாரதி.., எல்லாமே முடிஞ்சு.., கேள்விக்குறியான கண்ணம்மா வாழ்க்கை??
மேலும் இப்பொழுதே கொஞ்சம் கொஞ்சம் சந்தேகம் குந்தவைக்கு வந்து கொண்டே தான் உள்ளது. ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்படி இருக்க சக்திக்கும் குந்தவைக்கும் திருமணம் ஆவதற்கு முன்பாகவே குணசேகரனின் உண்மை முகம் தெரிந்து குந்தவை திருமணத்தை நிறுத்தி விடுவாராம். அதன் பிறகு தான் சீரியல் சூடுபிடிக்க போகிறது. அதன் பிறகு சக்தி என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.